Friday, 7 November 2014

ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செயற்கை 'பேய்' கருத்துகள்




சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை 'பேய்களை' உருவாக்க சோதனை மேற்கொண்டனர். சில மக்கள் பேய்கள் இருப்பதாக ஏன் பயப்படுகின்றனர் என்று அவர்கள் விசாரணை செய்து வந்தபோது, மக்களின் மூளையில் ஒரு தந்திரம் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தன்னார்வலர்களின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ரோபோவை பயன்படுத்தி மூளைகளில் தென்படும் உணர்வு ரீதியான சிக்னல்களை இடையூறு செய்ய வைத்து பயமுறுத்தும் உணர்வுகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மூளையில் செயல்படும் உடல் அசைவுகளில் இருந்து வரும் போலித் தோற்றம் தாமதமாக வந்தது. இது தங்களது சொந்த மூளையில் ஏற்படும் மாற்று எண்ணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர் என்று 'பேராசிரியர் Olaf Blanke கூறியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி என்பது முழு வளர்ச்சியாக இருக்க வேண்டும்: வாரணாசியில் மோடி பேச்சு

வாரணாசி: பிரதமர் பதவி ஏற்ற பின்னர் முதன் முறையாக நரேந்திர மோடி வாரணாசி சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார். விவசாயத்துக்கு அடுத்தபடி ஜவுளித்துறை அதிக வேலை  வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று  பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பணம் மட்டுமே நெசவாளர்களுக்கு உதவாது என நரேந்திர மோடி கருத்து தெரிவித்தார். நெசவாளர்களுக்காக தொலைநோக்கு திட்டமும் தேவைப்படுகிறது என்றும் மோடி கூறினார்.

நெசவாளர் முன்னேற்றத்துக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி என்பது முழு வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், ஒரு பகுதி மட்டும் வளர்ந்தால் அது வளர்ச்சி அல்ல என்றும்  மோடி தெரிவித்தார். மேலும் நான் உங்களின் சேவகனாக வந்துள்ளேன் எனவும் உங்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் இருப்பேன் எனவும் வாரணாசியில் மோடி உருக்கமாக பேசினார்.