Friday, 7 November 2014

ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செயற்கை 'பேய்' கருத்துகள்




சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை 'பேய்களை' உருவாக்க சோதனை மேற்கொண்டனர். சில மக்கள் பேய்கள் இருப்பதாக ஏன் பயப்படுகின்றனர் என்று அவர்கள் விசாரணை செய்து வந்தபோது, மக்களின் மூளையில் ஒரு தந்திரம் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தன்னார்வலர்களின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ரோபோவை பயன்படுத்தி மூளைகளில் தென்படும் உணர்வு ரீதியான சிக்னல்களை இடையூறு செய்ய வைத்து பயமுறுத்தும் உணர்வுகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மூளையில் செயல்படும் உடல் அசைவுகளில் இருந்து வரும் போலித் தோற்றம் தாமதமாக வந்தது. இது தங்களது சொந்த மூளையில் ஏற்படும் மாற்று எண்ணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர் என்று 'பேராசிரியர் Olaf Blanke கூறியுள்ளார்.

No comments:

Post a Comment