வாரணாசி: பிரதமர் பதவி ஏற்ற பின்னர் முதன் முறையாக நரேந்திர மோடி வாரணாசி
சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
விவசாயத்துக்கு அடுத்தபடி ஜவுளித்துறை அதிக வேலை வாய்ப்புகளை
உருவாக்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பணம் மட்டுமே
நெசவாளர்களுக்கு உதவாது என நரேந்திர மோடி கருத்து தெரிவித்தார்.
நெசவாளர்களுக்காக தொலைநோக்கு திட்டமும் தேவைப்படுகிறது என்றும் மோடி
கூறினார்.
நெசவாளர் முன்னேற்றத்துக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி என்பது முழு வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், ஒரு பகுதி மட்டும் வளர்ந்தால் அது வளர்ச்சி அல்ல என்றும் மோடி தெரிவித்தார். மேலும் நான் உங்களின் சேவகனாக வந்துள்ளேன் எனவும் உங்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் இருப்பேன் எனவும் வாரணாசியில் மோடி உருக்கமாக பேசினார்.
நெசவாளர் முன்னேற்றத்துக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி என்பது முழு வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், ஒரு பகுதி மட்டும் வளர்ந்தால் அது வளர்ச்சி அல்ல என்றும் மோடி தெரிவித்தார். மேலும் நான் உங்களின் சேவகனாக வந்துள்ளேன் எனவும் உங்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் இருப்பேன் எனவும் வாரணாசியில் மோடி உருக்கமாக பேசினார்.
No comments:
Post a Comment